கிறிஸ்துவே ஜீவன்…

கிறிஸ்துவே ஜீவன்…

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் (ரோமர் 6:23) பாவத்தினால் மரணம் வந்ததாகச் சொல்லும் வேதம், தேவனுடைய கிருபைவரமோ; பாவத்திற்கு நேர் எதிரான சுபாவமாக நாம் கருதும் பரிசுத்தத்தினால் அல்லது ஒழுக்கத்தினால் உண்டான நித்தியஜீவன் என்று சொல்லாமல், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் நித்தியஜீவன் உண்டானதாகச் சொல்லுகிறது. மரணத்தை பாவம் என்ற...
மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன்

மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன்

நான் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன் என்று உலகத்திடம் சொல்லிப்பாருங்கள்… அதற்கு சாத்தியமே இல்லை என்று உலகம் சொல்லும், உனது தற்காலிக மகிழ்ச்சிகளைக்கூட தட்டிப்பறிக்கக்கூடிய அளவுக்கு உனது உடலிலும், குடும்பத்திலும், வேலையிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்க்கு தேவையான காரணிகள் எதுவும் உன்னிடத்தில் இல்லை. நீ அந்த இடத்தை அடைவதும் கடினம். அதுமட்டுமல்ல,...
காரியசித்தி

காரியசித்தி

தாவீது கோலியாத்தை நோக்கி வீசிய கூழாங்கல் அன்று ஒருவேளை குறி தவறியிருந்தால் தாவீதின் கதி என்னவாகியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? குறிதவறாமல் வீசியது தாவீதின் திறமை என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. தாவீதுக்கே தெரியும் அது சந்தேகமே இல்லாமல் தேவச் செயல்தான். தாவீது கூழாங்கல்லை வீசியபோது அது கோலியாத்தின் நெற்றிப் பொட்டைத் தாக்கலாம்...
யாரோடு போராட?

யாரோடு போராட?

உலகத்தில் கொள்ளைநோய்கள் மூலமோ, இயற்கைச் சீற்றங்கள் மூலமோ பேரழிவுகள் நேரும்போது அந்த அழிவைத் தடுக்க ஒரு ஆவிக்குரிய போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய பொறுப்பு சபைக்கு வருகிறது. ஆனால் யாரோடு போராடுவது என்றுதான் சபைக்கு தெரியவில்லை. ஏனெனில் அழிவை அனுப்பியது தேவனா, சாத்தானா என்ற அடிப்படைக் குழப்பம் இன்று பல கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. கையில் ஒரு...
கிறிஸ்துவுக்குள் நான்…

கிறிஸ்துவுக்குள் நான்…

வானத்தையும் பூமியையும், அண்ட சராசரங்களையும் படைத்த கர்த்தர் என்னோடு இருக்கிறார். அவரே எனக்குள்ளும், எனக்கு வெளியேயும், என்னைச் சுற்றிலும் சூழ்ந்தும் இருக்கிறார். நான் அவரால் மீட்கப்பட்டிருக்கிறேன், பாதுகாக்கப்பட்டிருக்கிறேன். என்னைக் குறித்த ஒரு தெளிவான திட்டமும், உயரிய நோக்கமும் அவருக்கு இருக்கிறது. நான் அதற்கென்றே அவரால் படைக்கப்பட்டு அந்த திட்டத்துக்கு நேராகவே ஒவ்வொருநாளும் நடத்தப்படுகிறேன். நான் ஆவியானவரின்...
இருள், ஒளி மற்றும் மாயை

இருள், ஒளி மற்றும் மாயை

இவ்வுலகில் அத்தனையும் இருமைத் தன்மை கொண்டது. இருளும் ஒளியும் எதிரெதிரானதுதான் ஆனால் வெளிச்சமின்மைதான் இருள் என்பதிலிருந்தே இவற்றின் இருமைத் தன்மை விளங்கும். நீங்கள் வெளிச்சத்தை நோக்கி எவ்வளவு நெருக்கமாகச் செல்லுகிறீர்களோ அவ்வளவாக இருளையும் புரிந்து கொள்வீர்கள், நீங்கள் இருளை நோக்கி எவ்வளவு ஆழமாகச் செல்லுகிறீர்களோ வெளிச்சத்தையும் புரிந்துகொள்ள இயலும். இரண்டுக்கும் நடுவில் இருந்துகொண்டு பூமியை மட்டும்...
அத்திமரமும் நாத்தான்வேலும்

அத்திமரமும் நாத்தான்வேலும்

“நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் (யோவா 1:48)” என்று ஆண்டவராகிய இயேசு சொன்னவுடன் அதுவரை “நாசரேத்திலிருந்து வந்தவர்தானே” என்ற கண்ணோட்டத்தில் இயேசுவைப் பார்த்துக்கொண்டிருந்த நாத்தானியேல் “ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்று அவரிடத்தில் சரணடைகிறான். அதென்ன, “நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்” என்ற வெளிப்பாட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது...