நாம் கிறிஸ்துவை அறியாதவர்களை உலகபிரகாரமானவர்கள் என்றும் நம்மை ஆவிக்குரியவர்கள் என்றும் சொல்லுகிறோம். நாம் உண்மையிலேயே ஆவிக்குரியவர்களா? என்று ஆராய்ந்து பார்த்த போது மனதில் எழுந்த பல நெருடலான கேள்விகளுள் பத்தை மட்டும் இப்போது உங்கள் முன் வைக்கிறேன்:
கேள்வி #1
பிற மதத்தவர் ஆசீர்வாதத்தைத் தேடி புண்ணிய யாத்திரை செல்லுவதை விமர்சிக்கும் விசுவாசிகள் தாங்கள் ஆசீர்வாதத்தைத் தேடி ஆவிக்குரிய கூட்டங்களுக்கு ஓடுவது ஏன்? இயேசுவின் சீஷராக அவரை பின்பற்றும்படி அழைக்கப்பட்ட நாம் அவர் எப்படி பிதாவின் சித்தம் செய்வதே தமக்கு உணவு என்று வாழ்ந்தாரோ அதையே பின்பற்ற வேண்டுமில்லையா? இயேசு அப்படிச் செய்தபோது அவர் தேவைகள் எல்லாம் பிதாவால் சந்திக்கப்பட்டதே! அவர் எதிலும் குறைவுபட்டதாக வேதத்தில் இல்லையே! நாமும் பிச்சைக்காரராய் வாழ்வது அவரது சித்தமல்ல “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.(மத் 6:33) என்ற வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையில் புறக்கணிக்கப்பட்டது ஏன்?
கேள்வி #2
சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்களை விமர்சிக்கும் விசுவாசிகளாகிய நாம் ஊழியக்காரர்களை விக்கிரகமாக்கி வைத்திருப்பது ஏன்? கடவுளுக்கும் நமக்கும் கன்னிமரியாள் மத்தியஸ்தரல்ல என்று சொல்லும் நாம் பாஸ்டர்களை இன்று மத்தியஸ்தர்களாக்கி விட்டதேன்? அவர்கள் மட்டுமே சீஷர்களென்றால் புதிய ஏற்பாட்டின்படி நாமெல்லாம் யார்?
கேள்வி #3
பிறமதத் தலைவர் ஒருவர் மேடையில் வித்தைகள் செய்யும் போது அதற்க்கு என்ன தந்திரத்தைப் பயன்படுத்துகிறார் என்று ஆராயும் நாம், நமது ஊழியர்கள் மேடையில் பெயர் சொல்லி அழைக்கும் வித்தை, மல்லாக்க சாய்க்கும் வித்தைகளையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது ஏன்? இயேசுவும் அப்போஸ்தலரும் செய்யாததை என்ன ஆதாரத்தோடு அல்லது நோக்கத்தோடு செய்கிறார்கள் என்று நாம் ஆராய வேண்டாமா?
கேள்வி #4
புதுவருஷத்துக்கு ராசிபலன் பார்ப்பவர்களைக் கிண்டலடிக்கும் நாம் ”வாக்குத்தத்தம்” என்ற பெயரில் புத்தாண்டு ஆராதனைகளில் தரப்படும் குலுக்கல் பரிசை நம்புவது ஏன்? “இந்த வருஷம் உனக்கு சொல்லப்பட்ட ராசிபலன் பலிச்சிருச்சா? என்று உன் நண்பனைக் கிண்டல் செய்யும் விசுவாசியே! இந்த வருடம் உனக்கு குலுக்கல் முறையில் தரப்பட்ட வாக்குத்தத்தம் பலித்து விட்டதா? உனக்கு என்ன வாக்குத்தத்தம் வந்தது என்பதையாகிலும் நினைவில் வைத்திருக்கிறாயா? ஏன் இந்த மாய்மாலம்????
கேள்வி #5
“நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்” என்று முழங்கும் நாம் நமது சொந்தத் தேவைகளுக்காக மாத்திரமே ஜெபிப்பது ஏன்? சொந்தக்கவலைகள் நம்மை அழுத்துவதால்தானே? நாமே அனுபவிக்காத ஒன்றை பிரசங்கிப்பது ஏன்? அதற்காக இயேசு நிம்மதி தரமாட்டார் என்று சொல்லவில்லை. சுயத்தை சிலுவையில் அறையாமல் அந்த அனுபவத்துக்குள் கடந்து வரமுடியாது என்பதே உண்மை.
கேள்வி #6
விக்கிரகங்களின் பெயரைக்கூட உச்சரிக்கக் கூடாது என்று வைராக்கியம் பாராட்டுகிறோம் ஆனால் நமது வாழ்வில் விக்கிரக ஆராதனை இல்லையா? இயேசு தன்னை எந்த மாற்று மதத்தின் கடவுளோடும் ஒப்பிடவில்லை மாறாக தனது எதிரி “உலகப் பொருளே” என்று லூக்கா 16:13–இல் குறிப்பிடுகிறார். தேவைகளுக்காக ஜெபிப்பது தவறல்ல, ஆனால் உலகப் பொருளுக்காக, உலக ஆசீர்வாதங்களுக்காக மாத்திரமே இயேசுவைத் தேடினால் அது விக்கிரக ஆராதனை ஆகாதா?
கேள்வி #7
சினிமா, டிவி போன்ற கேளிக்கைகளை சாத்தானுக்குரியது என்று சொல்லிவிட்டு அவற்றை ஒதுக்கித்தள்ளும் விசுவாசியே! அதே கேளிக்கைகள் இயேசுவின் பெயரைத் தரித்துக் கொண்டு திருச்சபைக்குள் வந்தால் அது ஆவிக்குரியதாகிவிடுமா? இன்று வெளிவரும் பல கிறிஸ்தவ இசை ஆல்பங்களையும், கிறிஸ்தவ தொலைக்காட்சிகளில் வரும் “பிரமாண்டமான குரல் தேடல்களையும்”, “நீங்கள் விரும்பும் பாடலையும்” யாரிடமிருந்து பெற்றீர்கள்?
கேள்வி #8
பிரமாண்டமான அரங்கமைத்து லேசர் ஒளிக்கற்றைகள் மத்தியில் பல பெண்கள் பின்புறத்தின் நடனமாடிக்கொண்டிருக்க மைக்கேல் ஜாக்சன் பாடினால் அது உலகப்பிரகாரமானது. அதே மேடையில் அதே லேசர் ஒளிக்கற்றைகள் மத்தியில் அதே விதமாக பெண்கள் நடனமாடிக்கொண்டிருக்க பளபளக்கும் உடையணிந்து ஒரு ஊழியக்காரர் கிறிஸ்தவப்பாடல் பாடினால் அது ஆவிக்குரியதாகிவிடுமா? நமது மிஷனரி சகோதரர்கள் பலர் பசித்த வயிறோடு ஊழியம் செய்து கொண்டிருக்க, அவர்தம் பிள்ளைகள் உணவின்றி படிப்பின்றி அல்லாட இதற்காக செலவிடப்பட்ட இலட்சகணக்கான பணத்துக்கு கணக்கு என்ன? இளைஞர்களை ஆதாயம்பண்ண இப்படிச் செய்கிறோமென்றால், பவுலும், பேதுருவும், பர்னபாவும் யாக்கோபும் யோவானும் இப்படித்தான் இளைஞர்களை ஆதாயம் பண்ணினார்களா?
கேள்வி #9
எந்தக் குதிரையில் பணம் கட்டினால் ஜாக்பாட் அடிக்கும் என்று நம்பி பணம்கட்டுவது சூதாட்டமென்றால். எந்த ஊழியத்தில் விதைத்தால் நல்ல பொருளாதார அறுவடை வரும் என்று பார்த்து விதைப்பது(!) ஆவிக்குரியதாகுமா? ஆண்டவர் தரித்திரரான விசுவாசிகளுக்கு அவர்களது குறைவில் உதவி செய்யுங்கள் என்றல்லவா நமக்கு சொல்லியிருக்கிறார்! அதை அன்புடன் செய்வதா ஆதாயம் எதிர்பார்த்து செய்வதா?
கேள்வி #10
பிற மதத்தலைவர்கள் செய்த தவறுகள் வெளிப்படும்போது அவற்றைக் குறித்து எல்லொரிடமும் பேசி பரிகசிக்கும் நாம், நமது அபிமான ஊழியக்காரர்கள் தவறு செய்யும்போது அதை மூடி மறைக்க முயலுவது ஏன்?
Excellent…
நல்ல கேள்விகள.
Good One…
Did you ever gained a soul for Jesus Christ?….. There are two easy things in the world, 1. Easy to raise questions and ask. 2. Easy to comment about others. First please bring some souls into the kingdom of God… Don’t waste your life time and your energy on this useless things. Master will take care of his servants not other servant because he is the one going to ask the account and going to pay…. more over he is not a human boss……… God bless you.
அன்பு சகோதரர் அவர்களுக்கு, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. தங்கள் ஆத்தும பாரத்துக்காகவும் கர்த்தரைத் துதிக்கிறேன்.
பிரதான கட்டளை என்பது வெறும் சுவிசேஷம் அறிவிப்பது மாத்திரமல்ல. சீஷர்களை உருவாக்குவதாகும். அது ஒருவருக்கு ஞானஸ்நானம் கொடுப்பதோடு முடிந்து விடுவதல்ல. கிறிஸ்து உங்களுக்குள் உருவாகும் வரை கர்ப்பவேதனைப் படுகிறேன் என்று பவுல் சொன்னாரல்லவா?
பிள்ளையைப் பெற்று ரோட்டில் போட்டுவிட்டுப் போகும் பணியைத்தான் இன்று அனேகர் செய்துவருகிறார்கள். அவர்களுக்கு தேவையெல்லாம் ஆத்துமாக்களின் கணக்கு அவ்வளவே! வெறும் ஞானஸ்நானத்தோடு ஊழியம் நிறைவு பெறுவதென்றால் சபையில் தீர்க்கதரிசிகளையும் போதகர்களையும் ஏன் கர்த்தர் நியமித்தார்?
தங்களிடம் பணிவாக ஒரு பதில் கேள்வி! ஆத்தும ஆதாயம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? நரகத்துக்கு மனிதனைத் தப்புவிப்பதையா அல்லது கிறிஸ்துவுக்கு கறைதிரையற்ற ஒரு மணவாட்டியை ஆயத்தம் செய்வதையா? தங்கள் பதில் பின்னது என்றால் தங்கள் அப்படி எத்தனை பேரை ஆயத்தம் செய்துள்ளீர்கள்? தங்கள் பதில் முன்னது என்றால் தாங்கள் பிரதான கட்டளையை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று பொருள். ஏனென்றால் பிரதான கட்டளை என்பது ”சீஷர்களை” உருவாக்குவது.
”நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;” (மத்28: 19,20).
சீஷர்களை உருவாக்குவதானால் சீஷத்துவத்துக்க்கு எதிரான பாரம்பரியங்கள் தோலுரிக்கப்பட வேண்டும். யார் சீஷன் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்துவருகிறோம்.
நண்பர் விஜய் அவர்களின் கருத்துக்கு ஒப்பாக நம்முடைய தளத்தில் அடியேன் முன்வைத்த ஒரு கருத்து…
ஆடுகளைக் கூட்டிச் சேர்ப்பது மட்டுமல்ல,
அவை சிதறிப் போகாமல் காப்பாற்ற வேண்டும்.
வலைவீசி மீன்களைப் பிடிப்பது மாத்திரமல்ல,
அவை கரையேறுவதற்குள் மீண்டும்
துள்ளி விழுந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும்.
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=34927703
கடந்த சுமார் ரெண்டு வருடமுன்பு அடியேன் தமிழ்க் கிறித்தவ தளத்தில் பதித்து பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு கட்டுரையானது..
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=39725067
நண்பரின் எட்டாவது கேள்வியை எதிரொலிக்கிறது;
வாசித்து நண்பர் தம் கருத்துகளை முன்வைக்க அழைக்கிறேன்.
chillsam@rocketmail.com
சகோ.சில்சாம் அவர்களுக்கு, கட்டுரையைப் பரிந்து கொண்டதற்கு நன்றி! கட்டுரையில் என்னை அதிகமாக பாதித்து உணர்த்தியவை கீழ்க்கண்ட வாசகங்கள்:
“prophecy” என்பதற்கு “ஞானமாய் உபதேசிப்பது” என்றொரு பொருளை சமீபத்தில் அறிந்துகொண்டேன்.(Proverbs.30:1)
இவ்வுலகத்தின் வேஷம் வேண்டாமென்றுதான் “ஆட்டுத் தோலைப்” போர்த்துக் கொண்டு மலைகளிலும் குகைகளிலும் சிதறுண்டு அலைந்தார்கள்;(வாசிக்க எபிரெயர்.11)
மந்தை பெருகினால் ஆடுகளில் ஒழுங்கீனமும் மேய்ப்பனில் சோம்பலும் சோரம் போதலும் இயல்பு;எனவே தான் பிரதான மேய்ப்பனைப் பற்றிய அச்சத்தினை கண்காணியானவன் உடையவனாக இருக்கவேண்டும்
ஐயா, தாங்கள் பதிவில் தங்கள் நேர்மையும் பக்குவமும் தெரிகின்றன, மிக்க நன்றி
I have some more points to add:
1) I am from a Christian village which has sent so many missionaries and mission leaders to the unreached. It is also touted to be the town which generates huge funds for all the mission activities going on in north India. But, i am sad to say that most of the Christians in my neighborhood die or pass on to eternity daily and they are unsaved. Some of my friends who have died young were not saved. Why did the church, the missioners and the soul winners got lost in their mission in their home ground ?.
2) I have seen and heard of Christian households in my village not providing their servants enough wages, never treat them humanly. As the town is mostly of salary earners, they send a lot of money to mission activities in Bihar, Orissa etc for the betterment of the underprivileged over there. Why did they ignored the brother/sister serving them in their house ?
3) Christian businessmen (grocery store owners, chikki companies, schools, etc and other businesses which Christians own) send clothes to poor people in North India, never bother to pay adequate wages to their employees. Don’t we display characteristics which creates a distaste for Christianity ?.
4) Christian public sector workers and some private employees too, spend all their office timings in preparing Church bulletins, newsletters, and managing other church activities like participating in choir, collecting funds and helping others etc. Some go beyond, they keep reading bible or pray forget to deliver what the business has recruited them for. Don’t we give one tenth of our salary to God, with the good conscience that we deserved the remaining 9/10 by our hard work.?
5) We say that the world is wrong when it worships people who have money, but give importance to people who show off their value by displaying their ability to provide more to mission and church activities and ignore/forget ordinary Christian brethren who lack adequate voice in the church as a result of a less paying job and are struggling to meet their ends. Don’t we see it in churches where believers and pastors respecting the ones who are profitable to the church.?
தங்கள் பதிவிற்கு நன்றி சகோதரரே! இதில் நான்காவது தவறை (Christian public sector workers and some private employees too, spend all their office timings in preparing Church bulletins, newsletters, and managing other church activities like participating in choir, collecting funds and helping others etc) நானும் செய்திருக்கிறேன். ஆவியானவருடைய வாயாக செயல்பட்டு உணர்த்திவிட்டீர்கள். இந்தக் காரியத்தை மாற்றிக்கொண்டே ஆகவேண்டும். நன்றி!!
1. Do you follow the word of christ?
2. Jesus is the only judge and has the rights to judge people.
3. A righteous person should not raise these comments.
4. Have you ever read the chapter 1 Corinthians 12 ?
அன்பான சகோதரனே! தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி! நமது தளத்துக்கு தங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.
இதோ தங்கள் கேள்விகளுக்கு அடியேனுடைய பதில்கள்:
Do you follow the word of christ?
முயற்சி செய்து பார்த்து தோற்றுவிட்டேன் பிரதர். ஆனாலும் அவரது பெரிதான கிருபையால் இன்று நிர்மூலமாகாமல் அவர் பெலத்தால் நின்று கொண்டிருக்கிறேன்.
//Jesus is the only judge and has the rights to judge people.//
நாம் நீதிபதி என்று யார் சொன்னது? உங்கள் வீட்டில் உங்கள் சத்துரு ஒரு கூடைக் குப்பையை வந்து கொட்டுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதை சுத்தப்படுத்த உங்கள் ஊர் நீதிபதிதான் வரவேண்டுமா? ”நான் மகன்!, இது என் அப்பா வீடு!!” எனக்குத் தெரிந்த வேதம் அவ்வளவே!
//A righteous person should not raise these comments//
எனது ஜனத்தின் அக்கிரமத்தைத் தெரியக்காட்டுவதால் நான் அக்கிரமக்காரனாகி விடுவேனானால் அந்த அக்கிரமத்தின் எல்லைக்கே போக விரும்புகிறேன்.
//Have you ever read the chapter 1 Corinthians 12 ?//
1கொரிந்தியர் 12-க்கும் இந்தக் கட்டுரைக்கும் உங்கள் பின்னூட்டத்துக்கும் என்ன தொடர்பு என்று சற்று விளக்கினால் நலமாக இருக்கும்.
That was a good response by Vijay. I strongly agree with him. one of my best friend gave me an explanation that, “if we will not allow cancer to spread in our body if we detect it early” how can we allow such a thing of any kind detrimental to the whole body to grow”. And, Church as God sees, are members of the same body of Christ and therefore if we see certain parts of our body “instead of changing the world with the word of God is completely changing into world”, is it ok to sit idle and watch. Please correct me Vijay if i am wrong !!
You are absolutely right bro
அன்பான சகோதரரே!
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் நற்பணி.
அன்பு சகோதரரே,
//புதுவருஷத்துக்கு ராசிபலன் பார்ப்பவர்களைக் கிண்டலடிக்கும் நாம் ”வாக்குத்தத்தம்” என்ற பெயரில் புத்தாண்டு ஆராதனைகளில் தரப்படும் குலுக்கல் பரிசை நம்புவது ஏன்?//
வேதத்திலுள்ள வாக்குத்தத்தங்கள் அனைத்துமே (தனிநபர்களுக்கு விஷேஷமாய் வழங்கப்பட்டவைகளைத் தவிர) தேவனால் அவருடைய ஜனங்களுக்கு வாக்குப் பண்ணப்பட்டிருக்கிறது என்பதிலே உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்காது என நான் கர்த்தருக்குள் நம்புகிறேன். அதன்படி வேதத்திலுள்ள எந்த வாக்குத்தத்தையும் பற்றிக்கொண்டு ஜெபிக்கும்போது, அதனை நமக்கு நிறைவேற்ற தேவன் சத்தியமும், நீதியுமுள்ளவராயிருக்கிறார். அதன்படி வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்ள விசுவாசிகளை பழக்குவிக்கும் நோக்கில்தான் சபைகளில் நீங்கள் குறிப்பிட்ட காரியங்கள் செய்யப்படுகிறது. இதனை ராசிபலன்களோடு ஒப்பிடுவது மிகவும் வேதனையான காரியம். ஒருவேளை எனக்கு ஆண்டவர் வாக்குப்பண்ணிணதை நான் சுதந்தரிக்காமல் போனால், அது யாருடைய தவறு? வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்ள என்னை உற்சாகப்படுத்தி என்னை வழிநடத்திய சபையின் தவறா?
அன்புடன்,
வின்சென்ட்
அன்பு சகோதரர் வின்சென்ட் அவர்களுக்கு தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நான் எழுதிய காரணத்தை கீழே தந்திருக்கிறேன்.
காரணம் #1
ஒரு புதிய ஏற்பாட்டு விசுவாசி நேசிக்க வேண்டிய ஏங்க வேண்டிய வாக்குத்தமெல்லாம் பாவத்தை மேற்கொள்ளுவது பற்றிய, நித்திய வாழ்வு பற்றிய வாக்குத்தத்தங்களே! பூமிக்குரிய ஆசிகள் அல்ல. கிறிஸ்துவின் மணவாட்டியின் இருதயத்தை உலகப்பொருளுக்கு நேராகத் திருப்பக்கூடாது. அப்படித் திருப்புவது ஒரு குடும்பப் பெண்ணை விபச்சாரியாகுவதற்குச் சமம். எபிரேயர் 11,12 அதிகாரங்களில் வாக்குத்தத்தங்களைக் குறித்து பேசும் பவுல் நாம் அடைய வேண்டிய நித்திய இராஜ்ஜியத்தின் காரியங்களைக் குறித்தே பேசுகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். நாம் இவ்வுலகத்துக்குரியவர்கள் அல்ல. அதற்காக தேவன் நம்மைப் பொருளாதாரத்தில் உயர்த்தவே மாட்டார் என்று நான் சொல்லவில்லை. நமது இருதயம் அதைப்பற்றிப் போகக்கூடாது என்பதே பிரதான நோக்கம். புத்தாண்டில் கொடுக்கப்படுபவையெல்லாம் பூமிக்குரிய ஆசீர்வாதங்களே!
காரணம் #2
//அதன்படி வேதத்திலுள்ள எந்த வாக்குத்தத்தையும் பற்றிக்கொண்டு ஜெபிக்கும்போது, அதனை நமக்கு நிறைவேற்ற தேவன் சத்தியமும், நீதியுமுள்ளவராயிருக்கிறார். அதன்படி வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்ள விசுவாசிகளை பழக்குவிக்கும் நோக்கில்தான் சபைகளில் நீங்கள் குறிப்பிட்ட காரியங்கள் செய்யப்படுகிறது.//
ஏற்கனவே சுயநல சேற்றில் உழலும் விசுவாசிகளை அதை விட்டு தூக்கி எடுத்து பிறருக்காகவும் ஜெபியுங்கள் என்று அவர்களைப் பக்குவப்படுத்துவதே கடினமாயிருக்கும் வேளையில், அவர்களை தனது ஆசீர்வாதத்தைச் சுதந்தரிக்கப் பழக்குவிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்கள் 24 மணி நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். சுயத்தை வெறுத்தல் என்ற காரியத்தை முழு கிறிஸ்தவ உலகமும் மறந்துவிட்ட சூழலில் அதில்தான் ஜனங்களைப் பழக்குவிக்க வேண்டுமே தவிர இதில் அல்ல.
காரணம் #3
இது நமது விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு இது துளியும் உதவாது. உதாரணமாக “நீ மாம்சத்தின்படி பிழைக்க இனி மாம்சத்துக்கு கடனாளி அல்ல” என்ற பழைய ஏற்பாடு காணாத மாபெரும் வாக்குத்தத்தம் புத்தாண்டில் தனக்குக் கிடைத்தால் ஒரு விசுவாசி முகம் சுழிப்பான், (இதை எந்த சபையும் வாக்குத்தத்த சீட்டுகளில் எழுதமாட்டார்கள் என்பது வேறு விஷயம்) காரணம் அவன் எதிர்பார்த்தது அது அல்ல. அதே வேளையில் “உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன்” என்ற வாக்குத்தத்தம் கிடைத்தால் துள்ளிக் குதிப்பான் தனக்கு இவ்வாண்டு வேலையில் Promotion கிடைக்கப் போகிறதென்று. விசுவாசிகளில் உலக சிநேகத்துக்கு தீனிபோடும் முயற்சியே இந்த வாக்குத்தத்த குலுக்கல்.
காரணம் #4
ஒரு வாக்குத்தத்தத்தை தேவன்தான் ஒரு விசுவாசியிடம் அவரே விரும்பி தனிப்பட்ட விதத்தில் தரவேண்டுமே தவிர, அவரிடத்திலிருந்து நாமாகவே பிடுங்கக் கூடாது. நாமாகவே எழுதி நாமாகவே குலுக்கி நாமாகவே எடுத்துக் கொள்வது எப்படி ஆவிக்குரியதாகும்? இயேசுவோ அப்போஸ்தலரோ இம்முறையை போதிக்க வில்லையே!
காரணம் #5
//இதனை ராசிபலன்களோடு ஒப்பிடுவது மிகவும் வேதனையான காரியம்//
ஆம் சகோதரரே இது அதை விட மோசமானது. ஏனென்றால் ஒருவேளை வாக்குத்தத்தம் நிறைவேறாத பட்சத்தில் ஜனங்கள் முறுமுறுத்து தேவனைவிட்டு விலகவும் வாய்ப்புண்டு. இதற்கு தேவனோ அந்த விசுவாசியோ பொறுப்பல்ல. ஜனங்களை கவர்ந்திழுக்க இந்தத் தந்திரத்தைக் கையாண்ட சபையே பொறுப்பு.
காரணம் #6
நாம் தேவனிடத்தில் போனாலே அவர் ஏதாவது ஒன்றைக் கொடுப்பார் என்றெ மனநிலை அவரை வேதனைப்படுத்தும் விஷயமாகும். நமது பிள்ளைகள் அதே மனநிலையோடு நம்மை அணுகினால் அது நம்மை எவ்வளவு புண்படுத்தும்! எனக்கு வேறு எதுவுமே வேண்டாம் இயேசு போதும் என்று இருக்கும் ஒரு விசுவாசி எந்த வாக்குத்தத்தத்தையும் எதிர்பார்க்கமாட்டான்.
காரணம் #7
புத்தாண்டு ஆராதனைகளில் தேவனைத் தொழுதுகொள்ளுவது, சகோதர, சகோதரிகளோடு ஐக்கியம் கொள்ளுவதை விட “வாக்குத்தத்த குலுக்கல்” வேளையையே விசுவாசிகள் ஆவலாய் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால் நானும் அப்படித்தான் இருந்தேன். இந்த வாக்குத்தத்த சீட்டு மாத்திரம் தரப்படாவிட்டால் பாதிப்பேர் புத்தாண்டு ஆராதனைக்கு வராமல் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்க்க டி.வியில் உட்காந்து விடுவார்கள். அல்லது தூங்கி விடுவார்கள். ஆராதனையைத் தவறவிட்டுவிட்டால் வாக்குத்தத்தம் பறிபோய்விடும் என்ற எண்ணம்தான் பலரை பதறியடித்துக்கொண்டு சபைக்கு வரவைக்கிறது. இது பாஸ்டருக்கும் தெரியும் கர்த்தருக்கும் தெரியும்.
சகோதரரே, உங்கள் விளக்கம் திருப்தியாக இருந்தது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!.
ஒரு பின்னூட்டத்தையே கட்டுரையாக வழங்கிய விஜய் அவர்களைப் பாராட்டுவதா, தனது ‘நச்’ கேள்வியினால் ஒரு கட்டுரையினைப் பிரசவிக்கச் செய்த வாசகரை பாராட்டுவதா என்று தெரியவில்லை; எப்படியோ இதனால் எனக்கும் ஒரு கட்டுரை எழுதும் வாய்ப்பு கிட்டியது; பாராட்டுக்கள்.., இருவருக்கும்..!
2011 எப்படியிருக்கும்..? புத்தாண்டு கணிப்பு..!
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=39870203
Really a good debate and reply, to be understood and followed ? in our daily/yearly life.
கேள்வி #10
இந்த கேள்வியில் பெரிய சத்தியத்தையே எழுதியுள்ளீர்கள். தவறு செய்யும் ஊழியர்களின் தவறுகளை அவரிடம் நேரடியாக சொல்பவர் எத்தனை பேர்? அன்றேல் அவருக்காக ஜெபிப்பவர் எத்தனை பேர்?
போலி ஜெபத்திட்டங்களையும் தீர்க்கதரிசங்களைமே (சோதிடத்திற்கு ஒப்பானது) இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறோம். அவை அபத்தம் நிறைந்தவையாக இருந்தாலும் அவற்றைக் குறி்த்து எதுவும் எழுதுவதில்லை. சூரியநாயகனின் 2011 வருட தீர்க்க தரிசன அபத்தங்கள் குறித்து எத்தனை பேர் மற்றவர்களுக்கு விழிப்புணர்வூட்டியிருக்கிறோம். இவரின் கடந்தகால தீரக்கதரிசனங்கள் அனைத்தும் பொய்யாகிப்போனதே.
நித்தியானந்தாக்கள் தவறு செய்தால் அதை படம் போட்டு வெளிச்சம் காட்டுகிறோம். எம்மவர்கள் தவறு செய்தோலோ அதை சுட்டிக்காட்டவே தயங்குகின்றோம்.
இது தான் இன்றைய கிறிஸ்தவர்களின் போக்கு. நாம் முதலில் இப்படிப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வாயிருந்து நம்மை திருத்தாதவரையில் பல சூரிய நாயகர்கள் வருவார்கள்.
[[சூரியநாயகனின் 2011 வருட தீர்க்க தரிசன அபத்தங்கள் குறித்து எத்தனை பேர் மற்றவர்களுக்கு விழிப்புணர்வூட்டியிருக்கிறோம். ]]
I am not a fan or a follower of him.
என்றாலும், எதை அபத்தம் என்று சொல்கிறீர்கள்?
நண்பர் விஜய் அவர்களுக்கு,தங்களுடைய இந்த பத்து கேள்விகள் அடங்கிய கட்டுரையானது அப்பன் பெயர் தெரியாத பிள்ளையைப் போல அங்குமிங்கும் சிதைந்து திரிந்துகொண்டிருக்கிறது;நீங்கள் உடனடியாக செய்யவேண்டியது தங்கள் கட்டுரைகளைக் குறித்த கண்டிப்பான அறிவிப்பு;இதனால் வீணான குழப்பங்களையும் சர்ச்சைகளையும் நீங்கள் தவிர்க்கலாம்;நீங்கள் எழுதிய நோக்கமானது மறை(று)க்கப்பட்டு எதிரிகளுக்கு அவல் போலாகிவிட்டதை சற்று கவனியுங்கள்..!
http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=41124215
http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&p=3&topicID=41118228
http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=2064&Itemid=287
அன்பு சகோதரர்கள் சில்சாம் மற்றும் ராஜ்குமார் அவர்களுக்கும் மற்ற சகோதரர்கள் அனைவருக்கும் எழுதிக் கொள்ளுவது.
நமது கிறிஸ்தவத்தில் காணப்படும் மாய்மாலங்களையும் அறியாமையையும் நமது ஆவிக்குரிய குடும்பத்துக்கு எடுத்து இயம்பும்
பொருட்டு எழுதப்பட்ட “மனதை நெருடும் பத்து கேள்விகள்” என்ற கட்டுரையானது சில (கு)தர்க்கவாதிகளின் கையில்
ஆயுதமாகப் பயன்படுத்தப்பட தொடங்கி இருப்பது புரிகிறது. அதைத் தெரியப்படுத்திய சகோ.சில்சாம் அவர்களுக்கு நன்றி!
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்;(யோவேல்2:1) என்பதே ஆண்டவருடைய வார்த்தையாய் இருக்கிறது. நோயாளிக்கு அவன் நோயை உணர்த்திக்காட்டாமல் மருந்தை அவன் கையில் கொடுத்தால் அவனுக்கு மருந்தின் அருமை புரியாது. இதைத்தான் ஆண்டவர் ஆவிக்குரிய சீக்காளியான லவோதிக்கேயா சபைக்கு செய்தார்,
நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;
நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். (வெளி 3:17,18)
இக்கட்டுரையை எழுதிய போது தயக்கத்துடனேயே தொடங்கினேன். ஏனெனில் “கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிகிறாய்” என்ற குற்றச்சாட்டு சகோதரர்கள் நடுவிலிருந்தே புறப்படக்கூடும் என்ற உணர்வுதான். ஆனாலும் யாரைப் பிரியப்படுத்த ஊழியம் செய்கிறோம்? மனிதனையா? கர்த்தரையா? இந்தக் கேள்வியே என்னை இக்கட்டுரை எழுதத்தூண்டியது.
சகோ.சில்சாம் அவர்களே! இக்கட்டுரை அப்பன் பெயர் இல்லாத பிள்ளையாக அல்ல, ஆக்கியோனுடைய பெயருடனேயே எனது தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத் (கு)தர்க்கவாதிகள் என்னை விவாதத்துக்குள் இழுக்க வேண்டுமென்றே இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்து “யாரோ எழுப்பிய கேள்விகள்” என்ற போர்வையில் யுத்தத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே “ஆதிக்கிறிஸ்தவர்களுக்குத் தெரியாத உண்மைகள்” என்ற கட்டுரையில் என்னை திரித்துவம் குறித்த விவாதத்துக்குள் இழுக்க முனைந்தார்கள். நான் அவர்களோடு விவாதம் செய்ய உடன்படவில்லை. அவர்களது நோக்கம் புரிகிறது. இதற்கு அவர்களது பதில் “நாங்கள் உன்னை விவாதத்துக்குள் இழுக்க முயலும் அளவுக்கு நீ ஒன்றும் பெரிய ஆள் இல்லை” என்பதாக இருக்கும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன்.
நான் இவர்களைத் தவிர்க்கக் காரணம் இவர்களோடு பேசுவது நேர விரயம் அவ்வளவே! அவர்களுக்கும் அதுதான் நோக்கமே! நாம் யாருக்கு ஊழியம் செய்ய வேண்டுமோ அவர்களுக்கு நாம் ஊழியம் செய்யக்கூடாதபடிக்கு நம்மைத் திசைதிருப்பி நமது நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சப் பார்க்கிறார்கள். இவர்கள் அலங்கம் கட்ட முயன்ற நெகமியாவைத் திசைதிருப்ப முயன்ற தோபியா, சன்பல்லாத்து போன்றவர்கள். அவர்களது நோக்கம் நெகமியாவை திசை திருப்ப வேண்டும் என்பது மாத்திரமே!
கீழ்க்கண்ட வேத பகுதியை தியானித்துப் பாருங்கள் நெகமியா 6:2-4:
நான் வாசல்களுக்கு இன்னும் கதவுபோடாதிருக்கையில், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால், எனக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தார்கள்.
அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக் கூடாது, நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.
அவர்கள் இந்தப்பிரகாரமாக நாலுதரம் எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்தப்பிரகாரமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன்.
நமக்கு முன்னே ஒரு மாபெரும் பணியிருக்க இவர்களோடு யுத்தம் செய்து மினக்கெடுவானேன்!!
இவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது இவர்களை உதாசீனம் செய்வது மாத்திரமே! நெகெமியா இவர்களோடு போராடிக்கொண்டிருந்திருப்பானானால் அலங்கத்தைக் கட்டியிருந்திருக்க மாட்டான். இவர்கள் நம் எதிரிகள்தான் நாம் போராட வேண்டிய எதிரிகள் அல்ல அலட்சியம் பண்ணி கடந்து போக வேண்டிய எதிரிகள். கரணம் தமிழ் கிறிஸ்தவம் இவர்களை ஓரளவுக்கு அறிந்து வைத்திருக்கிறது. நமது உண்மையான எதிரிகள் டிவியில் உட்காந்து பரலோகக் கதை பேசிகொண்டிருக்கிறார்கள். பொருளாதார செழிப்பை உபதேசித்து மணவாட்டியை ”உலகப் பொருள்”என்னும் கள்ளப் புருஷனுக்கு கூட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், பரிசுத்த ஆவியர் பெயரால் குரங்கு வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். புதுப்புது ”திட்டங்களைக்” கண்டுபிடித்து ஜனங்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சபையை மேய்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தங்களைத் தாங்களே மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் கிறிஸ்தவம் அவர்களை நம்பி அவர்கள் பின்னால் போய்க் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு விரோதமாகவே நாம் மக்களை எச்சரிக்க வேண்டும் என்று நம்புகிறேன். இக்கட்டுரையால் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு ஏற்ப்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்.
யெகோவாவின் சாட்சிகளை பற்றி நினைத்து பல முறை நான் வருந்தியது உண்டு. ஏனென்றால் இயேசு இல்லாமல் பிதாவிடம் நேரடியாக போவது போன்ற ஒரு பயங்கரமான காரியம் வேறு ஒன்றும் இல்லை. “இயேசு இல்லாமல் பிதாவிடம் போவதை விட சாத்தானிடம் போவது உத்தமம்” (I really mean it). ஏனென்றால் இயேசு இல்லாதபட்சத்தில் நாம் தேவனுக்கு சத்துருக்கள்
ரோமர் 5:10. “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில்….”
எதோ சியோன் மலைக்கு போவதால் நம்முடைய கதை (விழுந்து, எழுந்து) பரிந்து பேசும் இயேசுவின் ரத்ததால் ஓடிக்கொண்டு இருக்கிறது
எபிரெயர் 12:24 “புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.”
சீனாய் மலையில் ஏறுவது சுலபமல்ல கர்த்தருடைய பிரசன்னம் உத்தமனாகிய மோசேயும் பயந்து நடுங்கதக்கதாக இருந்தது.
எபிரெயர் 12: 20-21 “ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள்.. மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது.
இயேசு இல்லாத பட்சத்தில் தேவனுடைய கோபம் பற்றி எறியும் ஒருவனும் அதற்கு முன் நிற்க முடியாது
யோவான் 3:36 “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார்.”
இவர்கள் ஏன் இயேசுவை தொழககூடாது என்று சொல்லுகிறார் என்றும் புரியவில்லை. வேதத்தில் திரித்துவதிற்கிற்கு அனேக சான்றுகள் உண்டு.
யோவான் 1:1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
ரோமர் 9:5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்.
யோவான் 20:28. தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
ஏசாயா 9:6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஸ்தேவானின் ஜெபம்.
அப்போஸ்தலர் 7:59. அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
24 மூப்பர்களின் ஜெபம்.
வெளி 5:8. அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து:
யோவானின் ஜெபம்.
வெளி 1:17. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
இயேசு மிகாவேலாக இருந்ந்தால் கீழே உள்ள மாதிரி சொல்லியிருப்பார்
வெளி 22:8-9 யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன்.அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.
ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை!
கடைசியாக பிதாவே குமாரனை தேவன் என்று விளிக்கிறார்
எபிரெயர் 1:8. குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
இன்னும் அனேக வசனங்கள் இருக்கிறது ஆனால் இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறன். சில முஹம்மதிய நண்பர்களோடு நான் உரையாடியது உண்டு அவர்கள் “இயேசு பிதாவை தன தேவன் என்றும்” , “நாளையும் நாழிகையையும் பிதா ஒருவர் தவிர..” போன்ற சில வசனங்களை வசனங்களை வைத்து வாதிடுவது உண்டு . இயேசுவுக்கு இருந்த இரண்டு சுபாவங்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர் பூமியில் வாழ்ந்த காலத்தில் தேவகுமரான் என்று அழைக்கபடுவதை மனுஷகுமாரன் என்று அழைக்கபடுவதை விரும்பினார். பாவிகளாகிய நம்மோடு இருப்பதாய் விரும்பினார்
நீதிமொழிகள் 8:27-31 . அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,. சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,. நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன். அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன்.
மனுசிகம் ஆவர் விரும்பி ஏற்றது.
பிலிப்பியர் 2:6-7. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
அன்பு சகோதரர் விஜய் சொன்னது போல, என் நேசரை ஆராதிப்பதினால் நான் நரகம்தான் போவேன் என்றால் எனக்கு மகிழ்ச்சியே! இரட்சிக்கப்பட வாழ்கையின் முக்கிய நோக்கம் இயேசுவோடு வாழ்வதே! அவருடைய மகிமையை பார்ப்பதே! பொற்றாலம் போட்ட வீதியில் உலாவுவது அல்ல
யோவான் 17:24. பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.
அன்பு சகோ.ஜான் அவர்களே! தங்கள் பதில்களுக்கு நன்றி. அற்புதமான விளக்கங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். தங்களது பின்னூட்டங்கள் அனைத்துமே தளத்தின் நோக்கத்துக்கு வலுசேர்க்கிறது. எனது மனமார்ந்த நன்றிகள்!!
அன்பு சகோதரர் ஜான் அவர்களின் கருத்து மிகவும் நேர்த்தியாக இருக்கிறது;எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும் அறிவாகிய ஒளியைப் பெற நிதானமாக உபதேசிக்கவேண்டுமாம்;அந்த நிதானம் தங்கள் எழுத்துக்களில் தெரிகிறது;தங்களது இந்த கருத்து அடுத்தடுத்து வரும் பின்னூட்டங்களில் மறைந்து போகாதிருக்க வேண்டி யௌவன ஜனம் தளத்தில் இதனை உங்கள் அனுமதியுடன் சேமித்து வைக்கிறேன்..!
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=39604807
நீங்கள் விரும்பினால் கலந்துரையாடல் தளத்தின் விவாதங்களிலும் போதனைகள் பகுதியிலும் ஆக்கப்பூர்வமான தங்கள் பங்களிப்பை வழங்கலாம்;ஆரோக்கிய உபதேசத்தைப் பின்பற்றுவோருடைய அனுபவங்களை அறியவும் அவற்றை ஒருங்கிணைக்கவும் யௌவன ஜனம் ஆவலுடன் இருக்கிறது.
Thanks Brother. Vjiay & Bro. Sam . அருமையான உழியம் செய்கிறீர்கள். நானும் அடிக்கடி இதுபோல எழுதவேண்டும் என்று நினைப்பது உண்டு ஆனால் செய்ய முடியவில்லை. தொடர்ந்து செய்யுங்கள். நினைவுக்கு வரும்போதெல்லாம் ஜெபிக்கிறேன். கிறிஸ்தவம் எங்கோ சென்று கொண்டு இருக்கிறது. பொய்யான, ஏமாற்றும் வேதத்துக்கு புறம்பான கரியங்கள் வெகுஜோரக நடந்துகொண்டு இருக்கின்றன. தேவன் கீழ்க்கண்டவாறு நம்மை அழைக்கிறார்
2 தீமோத்தேயு 4:2 “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
4:3. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
4:4. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
4:5. நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
அன்பு சகோதர அவர்களுக்கு கீழ்கண்ட தளத்திலுள்ள இந்த தொடுப்பில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியைக் குறித்து தங்கள் மேலான கருத்தை அறிய விரும்புகிறேன். உங்கள் பதிலை வைத்தே அந்த நபரை நான் கையாள முடியும் தயவுசெய்து அங்கே வந்து பதில் தாருங்கள் அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
நன்றி
அன்பு சகோதரர் ராஜ்குமார் அவர்களுக்கு,
இக்கட்டுரையால் தங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சிரமங்களுக்கு வருந்துகிறேன். அது நான் எழுதிய கட்டுரைதான். யாரும் எனக்கு மின்னஞ்ச்சல் அனுப்பவில்லை. யாரோ எழுதிய கட்டுரைக்கு என் பெயரைப் போட்டு பிரசுரிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. தாங்கள் குறிப்பிடும் நபர் யார் என்றும் எனக்குத் தெரியாது. அவரது மின்னஞ்சலை எனக்குத்தாருங்கள் நான் அவரைத் தொடர்பு கொண்டு அவரது நோக்கத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன். சகோ. சந்தோஷ் அவர்களுக்கு விரைவில் பதிலளிக்கிறேன்.a
அன்புடன்
விஜய்
கிறிஸ்தவம் எங்கோ சென்று கொண்டு இருக்கிறது. பொய்யான, ஏமாற்றும் வேதத்துக்கு புறம்பான கரியங்கள் வெகுஜோரக நடந்துகொண்டு இருக்கின்றன. தேவன் கீழ்க்கண்டவாறு நம்மை அழைக்கிறார்
2 தீமோத்தேயு 4:2 “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
4:3. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
4:4. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
4:5. நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி,
சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் என்னைத் தமது ஊழியத்திற்கு அழைத்தபோது தந்த வார்த்தைகள் இவ்வசனத்தின்’படி கர்த்தர் என்னை வழி நடத்துகிறார்.
தங்கள் தகவல்களுக்கு நன்றி, இந்த மின்னஞ்சல் மூலம் ஏற்பட்ட சிரமங்களுக்கு நானும் வருந்துகிறேன்
நல்ல கேள்விகள். அருமை. எனக்கு பிடித்த கேள்வி 2வது கேள்வியாகும். உண்மையாய் இயேசுவை மற்றவர்களுக்கு அறிவிக்கும் அனைவரும் சீஷர்களே.
the right questions in the right time.
i am also doing the same awakening ministry by asking right questions with christians in my teaching and training.
where is the answers????
did God said to you sit in Facebook and bargain, or the Bible which you’re using it’s different from other Bible. God Said go preach the gospel and make disciples. As I gone through some of your topic your particularly criticizing some one if you are dare enough go to them and tell the mistakes why you are sitting in facebook and wasting time and posting unwanted things, do not force some one to do your experience, every has there own experience.
//did God said to you sit in Facebook and bargain, or the Bible which you’re using it’s different from other Bible//
தங்களை எனது வலைதளத்தில் அமர்ந்து கொண்டு என்னுடன் பேரம் பேசச்சொல்லி ஆண்டவர் தங்களிடம் சொன்னாரா சகோ.ஆனந்தகுமார்??? நிச்சயமாக தாங்கள் பயன்படுத்தும் வேதத்தை நான் பயன்படுத்தவில்லை என்பது தங்கள் கேள்வி கேட்கும் தோரணையிலிருந்து புலப்படுகிறது.
//your particularly criticizing some one if you are dare enough go to them and tell the mistakes why you are sitting in facebook and wasting time and posting unwanted things//
ஓநாய்களுக்கு அறிவுரை கூறி அவர்களை ஆடுகளாக மாற்றுவது எனது வேலை இல்லை. ஓநாய்களைப்பற்றி ஆடுகளை எச்சரிப்பதே என் வேலை.
//why you are sitting in facebook and wasting time and posting unwanted things//
இங்கு உங்களது அறிவுரையை உங்களிடமே மீண்டும் தர விரும்புகிறேன். do not force some one to do your experience, every has there own experience.
if your bible is different from my bible then you might be a belongs to the groups called like
Only Jesus
Jehovah witness
Mormonism
or some other Cults
For ur kind info all the cult groups are following the same Bible but they also have a additional book which is written by their leaders. I dont belong to any such cultic groups.
உங்களது ப்த்து நல்ல கேள்விகள் அருமை,
ஓநாய்களுக்கு அறிவுரை கூறி அவர்களை ஆடுகளாக மாற்றுவது எனது வேலை இல்லை. ஓநாய்களைப்பற்றி ஆடுகளை எச்சரிப்பதே என் வேலை.
என இயேசுவை மற்றவர்களுக்கு அறிவிக்கும் எச்சரிப்பு
இது.
Thank you Bro.Edwin.
Very good points thanks
Dear Bro. Vijay..
Excellent Questions..:)
With your permission shell i share this message in my blog
(www.cigmsathy.blogspot.com)
Though the points are correct in the sense that the first and foremost is to make disciples . Yes, worldly things have come into churches as business spot. At the same time, those who criticise will always critise and let us not waste time by readings on these type of materials. It will tend to make you critise on those who really doing ministries and calling into Christ.
உங்களது 10 கேள்விகளும் மிக அருமை…